இந்தியா, செப்டம்பர் 15 -- அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளான இன்று சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதே போல,டெல்லியில் அண்ணாவிற்கு அதிமுக எம்பிக்கள் புகழ் மரியாதை செய்தனர். அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அதிமுக எம்பிக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் இன்பதுரை, தனபால் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து,மலர்தூவி ...