இந்தியா, ஜூன் 19 -- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்ததன் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அதிமுக-திமுக ஐ.டி.விங் இடையே எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்வதில் போட்டி ஏற்பட்டு உள்ளது.

2024 ஜூன் 19 அன்று, கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட மெத்தில் கலந்த கள்ளச்சாராயம் உட்கொண்ட பலர் வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் 57 பேர் உயிரிழந்த நிலையில், பின்னர் இறப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 31, சேலம் அரசு மருத்துவமனையில் 18, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர்.

தொழில்துறை பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படும் மெத்தில், ...