இந்தியா, ஜூன் 20 -- கீழடி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறான கார்ட்டூனை வெளியிட்டதாக திமுக ஐ.டி.விங் மீது அதிமுக ஐ.டி.விங் புகார் அளித்து உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. ஐ.டி. விங் அவதூறான கார்ட்டூனை வெளியிட்டதாக அ.தி.மு.க. இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கழகங்கள், ஐ.டி. விங் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, அ.தி.மு.க. ஐ.டி. விங் செயலாளர் ராஜ் சத்யன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க. ஐ.டி. விங் வெளியிட்ட கார்ட்டூன், "மிக தரம் குறைந்த, இகழ்வான" முறையில் இருப்பதாகவும், இது அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட...