இந்தியா, ஜூன் 2 -- மாணவர்கள், குறிப்பாக தங்களின் 10 அல்லது 12ம் வகுப்பு பொதுதேர்வுகளுக்க்கு தயாராகும் மாணவர்கள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் படிப்பது மிகவும் அவசியம். ஆனால் எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்று அவர்களுக்கு தெரியாது.

ஒவ்வொருவரும் ஒருமுறையை பின்பற்றி படிப்பார்கள். ஒரு சிலருக்கு சத்தம்போட்டு படிப்பது வழக்கமாக இருக்கும். ஒரு சிலர் மெதுவாகப்படிப்பார்கள். ஒரு சிலர் இரவில், அதிகாலையில், பகல் நேரத்தில் என வெவ்வேறு நேரங்களில் படிப்பார்கள். இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இரவு நேரத்தில் குறைவான அளவு கவனச்சிதறல்களே ஏற்படும். இரவின் அமைதி உங்களுக்கு படிக்கும் மனநிலையை உருவாக்கித்தரும். யாரும் இடையூறு செய்யமாட்டார்கள். இரவில் வாகன சத்தங்...