இந்தியா, மார்ச் 10 -- நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது நிதி நிலை குறித்தும், தன்னுடைய கணவர் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு, ஆபாச வீடியோக்களை தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு சம்பாதித்ததாகவும், கொரோனா காலத்தில் பண நெருக்கடியை சந்தித்த நடிகைகளிடம் பண ஆசைக் காட்டி, அவர்களை வீடியோவில் நடிக்க வைத்து, வெளிநாட்டு மொபைல் ஆப்களில் அவர் வெளியிட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த புகாரில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் இவர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நெட்டிசன்கள், ஷில்பா ஷெட்டியையும் 'ஆபாச மன்னனின் மனைவி' என ட்ரோல் செய்தனர்.

மேலும் பணத்திற்காகவே ஷில்பா ராஜ் குந்...