இந்தியா, பிப்ரவரி 11 -- இன்னும் திருமணம் ஆகாமல் எத்தனையோ 90'ஸ் கிட்ஸ்கள் திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு, திருமணம் மேடை வரை போய், நின்று போயிருக்கலாம். இந்நிலையில் காதலர் தினத்துக்குப் பின், சில ராசியினருக்கு திருமணத்தடைகள் நீங்கும். அப்படி எந்தெந்த ராசிகள் திருமணப் பந்தத்தில் இணையப்போகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

மிதுனம்: இந்த ராசியினருக்கு, பிப்ரவரி மாதத்துக்குப் பின், கல்யாணயோகம் உண்டாகவுள்ளது. இக்கால கட்டத்தில் குருபகவானின் அனுகிரகத்தால் பிடித்த நபரை சந்தோஷத்துடன் மனம் முடிப்பர். காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பெற்றோரின் ஆசியோடு, திருமணம் நடக்கும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் திருமணவாய்ப்புகள் பற்றிய பேச்சு அடிபட்டு நல்ல வாழ்வு வாய்க்கும். உங்களுக்கு ஏற்ற, உங்கள் க...