இந்தியா, மார்ச் 12 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவியிடம் பேசி, வீட்டிற்கு வரவைத்து உண்மையை சொல்ல வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, கார்த்தியின் பிளானை அறிந்த ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, நீ மாட்டிக்க போற மா என்று எச்சரிக்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, அவன் கில்லாடினா நான் அவனுக்கு மேல, நான் பண்ண போறதை மட்டும் பாரு என்று சொல்லி போனை வைக்கிறாள்.

கார்த்திக் வீட்டிற்கு வந்து நியூஸ் எடிட்டர் வந்து உண்மையை சொல்லுவான் என்று காத்திருக்க நேரம் ஆகி கொண்டே போகிறது, நியூஸ் எடிட்டர் வராத காரணத்தினால் ராஜேஸ்வரி என்ன...