இந்தியா, ஏப்ரல் 24 -- Kalakshetra Instructor Arrested:முன்னாள் மாணவர்களின் பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் கலாக்ஷேத்ராவின் முன்னாள் பயிற்றுநர் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, இந்திய கலைகளான பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளைப் பாதுகாக்க சென்னையில் 1936 முதல் செயல்பட்டு வரும் அகாடமி ஆகும்.

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பயிற்றுநரும் பரதநாட்டிய நடனக் கலைஞருமான ஸ்ரீஜித் கிருஷ்ணாவை, அவரது முன்னாள் மாணவிகள் இருவர் செய்த புகாரின் அடிப்படையில், தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் ந...