இந்தியா, மார்ச் 18 -- மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து ஜெயமோகன் செய்த விமர்சனத்திற்கு இயக்குநர் பாக்யராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கே. பாக்யராஜ் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அப்போது மேடையேறிய பாக்யராஜ், "மஞ்சும்மல்பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது.

காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள மக்களைப் பற்றி அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து எல்லாம் விமர்சனம் செய்து விட்டார். அது தமிழனுடைய நாகரிகமே கிடையாது.

அது நம்முடைய பண்பாட்டில் கிடையாது. நாம் எல்லோர...