இந்தியா, ஏப்ரல் 28 -- ஜெமினி கணேசனின் காதல் வாழ்க்கை குறித்து, பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஆகாயம் தமிழ் சேனலுக்கு அண்மையில் பேசினார்.

அவர் பேசும் போது, "புதுக்கோட்டையில் பிறந்தவர் ஜெமினி கணேசன். தாம்பரத்தில் இருக்கக்கூடிய கிறிஸ்டியன் கல்லூரியில் தான் அவர் படித்தார். படித்து முடித்து விட்டு, அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்ற தொடங்கினார்.

இதற்கிடையே, அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனையடுத்து, அவர் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை அங்கிருந்தே செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில்தான், ஜெமினி கணேசனின் அம்மா, அலமேலு என்ற பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார்.

அப்போது ஜெமினி கணேசன் அம்மாவிடம், நான் டாக்டராக வேண்டும் என்று கனவு வந்திருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இப்போது கல்யாணம் வேண்டுமா என்று கேட்டிருக...