இந்தியா, மார்ச் 29 -- சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை நேற்று இரவு கீழே விழுந்தது. இதில் அங்கு பணியாற்றக்கூடிய 3 பேர் மீது விழுந்தது. இந்நிலையில் அவர்களை மீட்ப்பதற்காக தீயணைப்புதுறை,தேசிய பேரிடர் மீட்பு குழு அங்கு வந்தடைந்து. சிக்கியவர்கள் இறந்த நிலையில் உடல் மீட்க்கப்பட்டு இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்த வந்த சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் தர்மராஜ், மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிர் இழந்துள்ளதாகவும்,அவர்களின் உடல் மீட்க்கப்பட்டு இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தின் திருச்சியையும் ,இருவர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேரும் தனியார் மதுபான விடுதியில் வேலை செய்தவர்கள் என தெரிவித்தார்.

கட்டிட மேற்கூர...