இந்தியா, ஏப்ரல் 20 -- இன்றைய மாறிவரும் காலநிலையில் 30 வயதை கடந்தாலே நம்மை நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. இதற்கு காரணம் நமது உணவுமுறை மாற்றம்தான். இதனால் அதற்குப்பின்னர் நாம் ஏதாவது ஒரு மாத்திரையை சாப்பிடவேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.

சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற அனைத்தும் செய்யும்போது, அது உங்கள் ஆரோக்கியம் மேம்பட உதவும். தினமும் இரவில் இந்தப்பொடியை சாப்பிடும்போது, எந்தவித மருந்தும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. இந்தப்பொடி உங்களுக்கு அத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.

நெல்லிக்காய் 4 பங்கு, தான்றிக்காய் 2 பங்கு, கடுக்காய் ஒரு பங்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து எடுப்பது திரிபலா சூரணம். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

திரிபலா சூரணத்தில் ஆன்டி ஆக்ஸிட...